Search This Blog

Showing posts with label Education. Show all posts
Showing posts with label Education. Show all posts

Wednesday, July 26, 2023

படித்து உருப்படாமல் போகிற வர்க்கம்

 

கல்வி தான் மனித குலத்தை ஏழ்மையில் இருந்து காப்பாற்றும், விடுவிக்கும் போன்ற புத்தொளிக் கால லட்சியங்கள் பாதி உண்மை மட்டுமே.
சொல்லப் போனால் கல்வி நம்மை ஒரு பொறிக்குள் மாட்ட வைத்துவிடும் எனத் தோன்றுகிறது. நான் இதை என் வாழ்க்கையில் இருந்தே புரிந்துகொண்டேன், ஏனென்றால் இன்னமும் சமூக சிந்தனையாளர்களும் கல்வியாளர்களும் பழைய பல்லவியையே பாடிக்கொண்டிருக்கிறார்கள்.
நாட்டை ஆள்பவர்கள் பொரும்பாலானவர்கள் படித்தவர்கள் அல்ல. படிப்பின் காலம் முடிந்துவிட்டதெனத் தோன்றுகிறது.
இன்னொரு பக்கம் கல்வி நம்மை பொருளாதார ரீதியாக முடக்கி விடுகிறது. அது நமது சம்பாத்திய திறன் குறித்து ஒரு தாழ்வுணர்வை ஏற்படுத்துகிறது.
உதாரணம் மாதச் சம்பளத்திற்கு வேலைசெய்யும் ஒருவரிற்கு ஒரு லட்சம் வேண்டுமெனில் அவர் தன் ஊதியம் என்ன, செலவீனம் என்னவென கணக்கிட்டு பணத்தை சேர்த்து வைத்து அதை ஈட்ட வேண்டும். அதற்கு நேரம் எடுக்கும். ஒருவேளை எதிர்பாரா செலவுகள் வந்தால் அவரது இலக்கு இன்னும் தள்ளிப் போகும். உடனே கடன் வாங்குவார்.
ஆனால் பணத்துக்கு மாத வருமான வேலையை நம்பியிராதவர்களுக்கு வேறு நூறு வழிகள் பணம் ஈட்டத் தெரிகின்றன. அவர்கள் கடன் வாங்கினால் அது தம் வணிகத்தை மேம்படுத்தவோ அல்லது நட்டத்தில் இருந்து வெளிவரவோ தான் வாங்குவார்கள்.
வேலைக்கு போகும் ஒருவர் ஆண்டு முழுக்க போராடி சேர்க்கும் பணத்தை அவர்களால் சில நாட்களில் சம்பாதிக்க முடியும், முடியாமலும் போகலாம், ஆனால் ஒரு சாத்தியம் அவர்களுக்குத் தெரிகிறது, அது இவர்களிற்கு தெரியாது.
படிப்பைக் கொண்டு ஒருவர் ஏழை நிலையில் இருந்து மத்திய வர்க்கத்திற்கு போய் விடுகிறார். ஆனால் அதன் பிறகு அவர் தேங்கி விடுவார். பொருளாதாரம் சுணங்கினால் அவருடைய சம்பளம், வேலையில் வளர்ச்சி இல்லாமல் ஆகும். அவரது பிள்ளைகளும் பெரும்பாலும் மத்திய வர்க்கமாகவே இருப்பார்கள். இதை இன்று மத்திய வர்க்கப் பொறி என்கிறார்கள்.
எமது நாட்டில் ஏழைகளை விட மத்திய வர்க்கமே மிகப்பெரிதாக இருப்பது இதனால் தான்.
ஏனென்றால் படிப்பு நாம் செல்வந்தர் ஆகவோ சுதந்திரமாக இருக்கவோ சொல்லித் தரப்படுவதில்லை.
பாடசாலையிலோ, பல்கலைக்கழகத்திலோ நீங்கள் எப்படி பணக்காரர் ஆவது என சொல்லித் தர மாட்டார்கள். எப்படி ஒருவரிடம் வேலை பார்ப்பது என்றே சொல்லித் தருவார்கள்.
கல்வியின் நோக்கமே மத்திய வர்க்க அடிமைகளை உருவாக்குவது தானோ எனத் தோன்றுகிறது. அந்த உண்மையை எதிர்கொள்ள விரும்பாமலே நாம் கல்வியின் மகத்துவம், விடுதலை மார்க்கம், அறிவின் சிறப்பு என கதையழந்து கொண்டிருக்கிறோம்.
ஒரு பெரும் உலகம் நம்மைச் சுற்றி உள்ளதை நாம் கவனிப்பதில்லை. படிக்க படிக்க நாம் உண்மையில் இருந்து விலகிக் கொண்டே போகிறோம்.
படிக்காதவர்கள் எதில் பணம், எது எதிர்காலம் என்பதில் கூடுதல் தெளிவாக இருக்கிறார்கள்.
அடிமட்ட வணிகர்களில் பணக்கஷ்டத்தில் இருப்பவர்கள் உண்டு. ஆனால் அவர்களுக்கு சாமர்த்தியமும் ஆதரவும் இருந்தால் முன்னேறும் வாய்ப்புகள் பிரகாசமானவை. மத்திய வர்க்க ஊழியர்களுக்கோ அப்படி எந்த எதிர்காலமும் இல்லை. அவர்கள் வாழ்நாள் முழுக்க மகிழ்ச்சியாக பொந்துக்கள் வாழும் எலிகளே. கடன், கடனுக்கு மேல் கடன் என எச்சிற் பருக்கைகளை நம்பி இருட்டில் ஒளிந்திருப்பவர்களே. ஒவ்வொரு அரசாங்கமும் வரியை அதிகப்படுத்துகையில் மென்னி நெரிக்கப்படுபவர்களே. எதையும் துணிந்து செய்யும் சொல்லும் துணிச்சல் அற்றவர்களே.
இந்த அடிப்படையான உண்மை அறிந்தவரக்ள் மேல்தட்டை சேர்ந்த வணிக சமூகங்கமே. அவர்களே அரசாங்கத்தின் மேல் அமர்ந்து கட்டுப்படுத்துகிறார்கள். மிகச்சொற்பமாகப் படித்த அவர்களிடம் மிகப்பெரிய படிப்பாளிகள் கைகட்டி நிற்கிறார்கள் என்பதே எதார்த்தம்.
நம் கல்வியமைப்பு இந்த அடிப்படை உண்மையை எல்லாருக்கும் சொல்லித் தந்தால் நம் மக்கள் மிக வேகமாக வாழ்க்கையில் முன்னேறுவார்கள்.
பௌதீக உலகுக்கு வெளியே நாம் கற்கும் அத்தனை அறிவுகளும் ஒருவித சுயகிளர்ச்சிக்கான விளையாட்டு மட்டுமே எனத் தோன்றுகிறது.
கல்வி சமத்துவத்தை, சுதந்திரத்தை, விடுதலையைத் தருகிறதா? இல்லையென்பேன். அதிகாரமும் பணமுமே இவற்றைத் தருகிறது.
அதிகாரத்தையும் பணத்தையும் கல்வியைக் கொண்டு அடைய முடியாது. வணிகம் பணத்தையும், அரசியல் அதிகாரத்தைத் தருகிறது.
அரசியலில் மிக அதிகமாக படித்தவர்கள் மக்களிடம் இருந்து விலகி இருப்பதால் அவர்கள் வெற்றி பெறுவதில்லை. அதிகாரத்தையோ பொருளாதார ஸ்திரத்தன்மையையோ அடைவதில்லை.
பண்பாட்டு அறிவை எடுத்துக் கொண்டால் படித்தவர்கள் ஒருவித மீபொருண்மை, கடப்புநிலைவாதத்தில் சிக்கிக் கொள்கிறார்கள் - அவர்கள் தமக்காக அன்றி இல்லாத அருவங்களுக்காக வாழ்கிறார்கள். அவர்கள் பயந்தாங்கொள்ளிகளாக இருக்கிறார்கள்.
கல்வியும் வேலையும் உலகம் முழுக்க மனிதனின் முதுகெலும்பை உடைத்துவிடுகின்றன.
படித்து காற்சட்டை அல்லது சேலை கட்டிக்கொண்டு மோட்டார் சைக்கிளில் வேலைக்குப் போகிறவர்களை விட அழுக்கு சாரம் அல்லது சட்டையுடன் மூலைக்கு மூலை காய்கறி/ மீன் விற்பவர்களே மேலானவர்கள் என நினைக்கிறேன்.
இந்த காற்சட்டை கோஷ்டி நம் பொருளாதாரத்தில் சிறிய சலனம் ஏற்பட்டால் வீட்டில் வேலையின்றி உட்கார்வார்கள், ஒவ்வொரு இடமாக வேலை கேட்டு அலைவார்கள், ஆனால் இந்த காய்கறி/ மீன் வியாபாரிகள் அழியவே மாட்டாரக்ள்.
இத்தனை இத்தனை அடிமைகளை உற்பத்தி செய்யும் கல்வியமைப்பில் பல்கலைக்கழகப் படிப்பிற்காக ஒரு குழந்தை தன் வாழ்வின் முதல் 25, 26 ஆண்டுகளை வீண் உழைப்பில் செலுத்துவதை நாம் ஏன் இவ்வளவு கொண்டாடுகிறோம் என எனக்குப் புரியவில்லை.
Thanks

Thirunavukkarasu Senthan

Wednesday, May 11, 2022

Electrochemistry Mcq 1979 to 2020

 


Electrochemistry is the study of chemical processes that cause electrons to move. This movement of electrons is called electricity, which can be generated by movements of electrons from one element to another in a reaction known as an oxidation-reduction ("redox") reaction.

Wednesday, September 29, 2021

ஒரு மொழியின் இலக்கணம், இலக்கியம் என்பவற்றை எப்படி அழிக்கலாம்?

 

Rajarednam Neminathan

ஒரு இனத்தை அழிக்கவேண்டுமானால்; ஆட்களைக் கொன்றுதான் அழிக்கவேண்டும் என்றில்லை. அந்த இனத்திற்கான மொழியை அழித்துவிட்டால் சரி.

அப்படியாயின் மொழியை அழிக்கவேண்டும் என்றால் என்னசெய்யலாம்?
அந்த மொழியின் இலக்கியம், இலக்கணங்களை அழித்துவிடவேண்டும்.
ஒரு மொழியின் இலக்கணம், இலக்கியம் என்பவற்றை எப்படி அழிக்கலாம்?
ஒரு மொழியில் பயன்படுத்தப்படும் சொற்களை, வாக்கியங்களை எழுத்துக்களை எழுத்தின் உறுப்புக்களை எப்படிப் பாவித்தாலும் சரி, விளங்கினால் சரிதான், தொடர்பாடல்தான் முக்கியம், மொழி என்பதே தொடர்பாடலின் கருவிதான் என்று சுருக்கிவிட்டால் சரி.
இப்படியான ஒரு தோற்றமாயையை ஏற்படுத்தினால் ஒரு விடயத்தை பலரும் பல விதமாகப் பயன்படுத்த இடமளிக்கும். இதனால் சொற்களில், இலக்கணத்தில், எழுத்தமைப்பில் ஒரு குழப்பம் தோன்றும் அந்தக் குழப்பத்தை மூலதனமாக்கி கிளைமொழிகள் உருவாகும். கிளைமொழிகள் உருவாகினால் மூலமொழி அழியும்.
மொழி என்பது இயற்கையின் அங்கமாகும். மனித மனத்தின் செயலாற்றலாகவும் உள்ளுணர்வாகவும் சக்தியாகவும், ஒருவரின் மனச்சாட்சியாகவும் மொழி இருக்கிறது. அப்படியென்றால், மொழி மனித மனத்தின் ஒட்டுமொத்த அறிதல் என்றாகிறது. அறிதல் வளரவளர, மொழியும் வளருகிறது. மொழி தொடர்பாடும் ஊடகம் மட்டுமே என்பது வீட்டில் மாட்டிவைத்திருக்கும் சுவாமி படங்கள்தான் கடவுள் என்று சொல்வதற்கு ஒப்பானது.
மொழியின் செயற்பாடு வெறுமனே தொடர்பாடல் மாத்திரந்தான் என்று நினைப்பது மொழியறிவின் முதற்கட்டமான குழந்தைநிலை. உதாரணமாக நான் உங்கள் ஊரைக்குறிப்பிட்டு திட்டுகிறேன் என்று வைத்துக்கொள்ளுங்கள். நீங்கள் புவியியல் ரீதியான ஒரு இடமாக மட்டும் உங்கள் ஊரை வைத்திருந்தால் பேசாமல் போய்விடுவீர்கள். ஆனால் உங்களது ஊர், உங்களது ஆழ்மனதுடன், நினைவுகளுடன், நம்பிக்கைகளுடன், உணர்வுகளுடன், அறிவு, மனப்பாங்கு போன்ற பல விடயங்களுடன் தொடர்பட்டிருப்பதால் உங்களுக்கு ஊரைத் திட்டியதும் கோபம் வருகிறது. மொழியின் பங்களிப்பு தொடர்பாடல் மட்டும்தான் என்று சொல்வது. ஒரு தட்டையான கருத்தாகும். ஊர் என்பது உங்கள் வசிப்பிடம் அமைந்திருக்கும் ஒரு இடந்தானே அதைத் திட்டினால் உங்களுக்கேன் கோபம் வரவேண்டும். மொழி என்பதும் அதைப்போலத்தான் அதன் நோக்கம் தொடர்பாடல் மட்டுந்தான் என்றால்; நீங்கள் உலக வரலாறு அறியாதவர்தான். மொழியினால் எத்தனை போர்கள் நடந்திருக்கின்றன.
பிரித்தானியா என்றால் ஆங்கிலேயர்களின் நாடு என்றுதான் வெளியில் இருந்து பார்ப்பவர்கள் நினைப்பார்கள் ஆனால் அங்கு வேல்ஸ் மொழி, ஐரிஸ் மொழி என்று பிறமொழிகள் உள்ளன என்பதை அறிவீர்களா? அவர்களிடமிருந்து மொழி என்பது தொடர்பாடல் செய்யும் கருவி மட்டுல்ல என்பதை அவர்களுடன் நீண்டகாலமாகப் பழகி நிதானமாக அறிந்துகொண்டேன். மொழி வெறுமனே தொடர்பாடற் கருவிதான் என்போரைப் பார்க்கும்போது எனது வேல்ஸ் நண்பர்கள் ஞாபகத்திற்கு வருவார்கள்.
Say the Colour with "U" ஆங்கிலேய நண்பர்கள் அடிக்கடி சொல்லக் கேட்டிருக்கிறேன். அதாவது அமெரிக்க ஆங்கிலத்திடம் இருந்து பிரிட்டிஷாரின் ஆங்கிலத்தை பாதுகாக்க அவர்கள் திடமாக இருப்பதைத்தான் இந்த சொல்லாடல் உணர்த்தும். பிரித்தானியர் வர்ணத்தை colour என்று எழுதுவர். அமெரிக்கர்கள் color என்று எழுதுவார்கள்.
உச்சரிக்கும் போது இருவரும் ஒரேவிதமாகத்தான் உச்சரிப்பர். ஆனால் "U" சேர்த்து உச்சரிக்கவேண்டும் என்று பிரித்தானியர்கள் சொல்வது அமெரிக்க ஊடுருவலில் இருந்து பிரித்தானிய ஆங்கிலத்தைப் பாதுகாக்க வேண்டும் என்பதற்காகத்தான். உண்மையில் உச்சரிக்கும்போது "U" இனை உச்சரிக்கமுடியாது ஆனால் அவர்கள் அப்படிச்சொல்வது அமெரிக்க ஆங்கிலத்தில் இருந்து பிரித்தானிய ஆங்கிலத்தைப் பாதுகாக்கத்தான்.
இரண்டும் ஆங்கிலந்தானே பிறகு ஏன் பாதுகாக்கவேண்டும் என்று நீங்கள் கேட்கலாம். இரண்டும் ஆங்கிலந்தான் ஆனால் ஒரே மொழியில் தங்களது தனித்துவத்தைப் பாதுகாக்க வேண்டும் என்பதில் அவர்கள் தெளிவாக இருக்கிறார்கள்.
இணையத்தையும் சமூக ஊடகங்களையும் நேற்றுக்கண்ட நாமே எழுதுவது மற்றவருக்கு விளங்கினால் சரி தொடர்பாடல்தானே? என்று குறிப்பிட்டால் மொழியை நாங்கள் தெளிவாக புரிந்துகொள்ளவில்லை என்றுதான் சொல்லவேண்டும். தொடர்பாடல் மட்டுந்தான் மொழியின் நோக்கம் என்றால் உலகின் எல்லோரும் விளங்கிக்கொள்ளக்கூடிய சைகை மொழியை நாம் பொதுமொழியாக்கிவிடலாமே?
பேச்சுமொழி உரையாடலில், பேசாமல் முக அறிகுறிகளாலும், சைகைகளாலும் கருத்துக்களை வெளியிடுவதற்கு இடமும், வழிகளும் உண்டு. அத்துடன் உடனுக்குடன், விளக்கம் கேட்டு அறிந்து கொள்ளும் வசதியும் உண்டு. ஆனால் இந்தவசதி, எழுதும் மொழியில் பொதுவாக் கிடைப்பதில்லை. இதன் காரணமாகச் எழுத்துவடிவத்தில் சில கூடுதல் குறியீடுகளைப் பயன்படுத்திக் கடுமையான விதிகளைக் கடைப்பிடிக்க வேண்டியுள்ளது.
அதிலும் மொழிகளின் தனித்துவம் காரணமாக ஒவ்வொரு மொழியின் அடிப்படையில் வெவ்வேறு சைகைமொழிகள் உள்ளன. உதாரணமாக ஆங்கிலத்தை அடிப்படையாக கொண்டமைந்த சைகைமொழி கற்றவருக்கு, தமிழ் சைகை மொழி விளங்காது.
உலகின் எந்த மூலையிலும் தமிழ்மொழிக்கென்று ஒரு நாடு இல்லை. அரசியல் அதிகாரத்தில் இல்லாத ஒரு மொழி எவ்வாறு அழியாமல் நிலைத்திருக்கிறது என்றால் அதற்குரிய காரணம் தமிழர் இலக்கியங்களும் இலக்கண நூல்களுந்தான்.
பொருள்பொதிந்த மொழியை உருவாக்கச் சொற்கள் விதிகளின் சட்ட திட்டங்களுக்கு உட்பட்டுப் பயன்படுத்தப்படுகின்றன. உதாரணமாக, சொல்லின் அமைப்பு ஒரு குறிப்பிட்ட விதிகளைப் பின்பற்றி பொருத்தமான பொருளை உருவாக்குவதாகும். இந்த விதிகளும் தன்னிச்சையாக ஏற்படுத்தப்பட்டதாகும். இருப்பினும், அந்த விதிகள் எல்லோராலும் ஒப்புக்கொள்ளப்பட்ட நிரந்தரத் தன்மை கொண்டவை. ஆகையால், ஒலிக்குறியீட்டின் அடிப்படையில் எழுந்த விதிகளால் உருவான மொழியின் மூலமாகத்தான் மனிதர்கள் கருத்துக்களை உருவாக்குகிறார்கள். இந்த விதித்திட்டம் மிகவும் சிறப்பான முறையில் மனிதனால் மட்டுமே ஏற்படுத்தப் பட்டதாகும்.
உதாரணமாக எனது அனுபவம் ஒன்றைச் சொல்கிறேன். ஆலயத்தில் ஓரு சிவனடியார் கொஞ்சம் நகைச்சுவையாப் பேசிக்கொண்டிருந்தார். நான் அவரது பக்கத்தில் போய் அவர் பேசுவதைக் கேட்டுக்கொண்டிருந்தேன். எனது கையில் இருந்த கற்பூரப் பெட்டியை அவர் கவனித்துவிட்டார். "இது என்ன" என்று கேட்டார். நானும் "கற்பூரம்" என்றேன். அது தவறு என்றார். கருப்பூரந்தான் சரி என்றார். "அப்படியானால் இந்தப் பெட்டியில் எழுதியிருப்பது தவறு என்கிறீர்களா?" என்று நான் கேட்டேன்.
"நீ நாச்சியாரைப் பிழை சொல்கிறாயா? என்றார்.
கருப்பூரம் நாறுமோ கமலப்பூ நாறுமோ
திருப்பவளச் செவ்வாய்தான் தித்தித்தி ருக்கும்மோ
மருப்பொசித்த மாதவன்றன் வாய்ச்சுவையும் நாற்றமும்
விருப்புற்றுக் கேட்கின்றேன் சொல்லாழி வெண்சங்கே
என்னும் பாடலிலே கருப்பூரம் என்றுதான் சொல்லியிருக்கிறாள்." என்றார் பிறகெப்படி கருப்பூரம் கற்பூரமாக மாறும் என்றார்.
இனிமேல் கருப்பூரம் என்றுதான் பாவிக்கவேண்டும் என்று நினைத்துக்கொண்டேன். ஒரு சொல்லுக்கே இலக்கியத்தில் ஆதாரம் இருக்கும்போது உரைநடை ஐரோப்பியர் காலத்தின் பின்னர்தான் தோன்றியது எனினும் அதையும் கடந்து நிற்பதாகவே எமது மொழியின் இலக்கணம் உள்ளது சிறப்பு.
எல்லாக் காலத்திற்கும் ஏற்றவகையில் இலக்கணம் எழுத இந்த நன்னூலார், தொல்காப்பியர் போன்றவர்களுக்கு எவ்வாறு முடிந்தது? எதிர்காலத்தில் வரக்கூடிய சவால்களுக்கு எல்லாம் வழிவிட்டு அதற்கு தீர்வும் வைத்துவிட்டுப்போயிருக்கிறார்கள்.
இன்றைய காலத்தின் நவீன தொடர்பாடல் முறைகளும் சாதனங்களும் எமது மொழிக்கு சவாலான விடயந்தான் எனினும் நாம் புதிதாக ஒன்றும் செய்யவேண்டியதில்லை. நமது எழுத்துக்களை- எழுத்துப்பிழை, இலக்கணப்பிழையின்றி எழுதினாலே போதும்.
முடிந்தவரை பிழையின்றி எழுதுவதற்கு முயற்சியுங்கள், சரியாக எழுதமுடியாவிட்டால் கற்றுக்கொள்வோம்.

Friday, September 3, 2021

பண்டையகால வணிக நகர் அரிக்கமேடு (பாண்டிச்சேரி)

அரிக்கமேட்டின் தொல்லியல் பழமை குறித்த எழுத்துப் பதிவுகள் கி.பி. 18ஆம் நூற்றாண்டிலேயே தொடங்கியது. மூவேதுப்ரேய்ல் என்பவர் தொல்லியல் முக்கியத்துவம் குறித்த தொடக்கநிலை ஆய்வுகளை மேற்கொண்டார். எனினும் அதிகாரப்பூர்வமான ஆய்வுகள் மார்டிமர் வீலர் அவர்களால் 1945இல் மேற்கொள்ளப்பட்டது.





தமிழகத்தின் கிழக்குக் கடற்கரையோரம் பண்டைக்காலத்தில் பல வணிகத்தளங்கள் இருந்தன. அவற்றுள் மாமல்லபுரம், எயில்பட்டினம் (மரக்காணம்), அரிக்கமேடு (Arikkamedu), காவிரிப்பூம்பட்டினம், கொற்கை முதலியன குறிப்பிடத்தக்கன. மேற்கண்ட ஊர்களுள் அரிக்கமேடு என்பது புதுவை மாநிலத்தின் புகழ் சேர்க்கும் முகவரிப் பகுதியாக விளங்குகிறது.
( ஆங்கிலத்தில் ARIKAMEDU ) அரிக்கமேடு என்னுமிடம், தென் இந்தியாவின் பாண்டிச்சேரி யூனியன் பிரதேசத்தின் அருகிலுள்ள தொல்பொருளாய்வு சார்ந்த இடமாகும்.சோழர் காலத்தில் அரிக்கமேடு ஒரு மீனவ கிராமமாக இருந்து. இங்கிருந்து ரோம் நகருடன் வாணிபம் நடைபெற்றது என்று அகழ்வாராய்ச்சி தெரிவிக்கின்றது .


புதுச்சேரிக்குத் தெற்கே ஆறு கிலோ மீட்டர் தூரத்தில் அரியாங்குப்பம் ஆற்றின் கரையில் அமைந்துள்ளது. அரியாங்குப்பம் ஆற்றின் வலது கரையில் அரிக்கமேடு அமைந்துள்ளது. அந்த இடத்தில், மேற்கிலிருந்து கிழக்கு நோக்கியோடிய ஆறு வளைந்து வடக்கு நோக்கிச் சென்று பின்னர் கடலில் கலக்கிறது
அரிக்கமேடு அழகான அமைதியான இடம் என்பது மட்டுமின்றி அங்கு வெளிநாட்டு வாணிபம் மிகச் செழிப்புற்று வளர்ந்திருந்திருக்கிறது என்பதும் கவனத்திற்குரியது ஆகும். இந்த இடம் எவ்வளவு வளத்துடனும் வனப்புடனும் விளங்கியது என்பதை அங்குள்ள திருமிகு "பிஞ்ஞோ தெ பெகெய்ன்" (MGR PIGNAY DE BEHAINE) என்ற கிறித்துவ மதகுருவின் அழகிய வீடு நமக்கு நன்கு புலப்படுத்துகிறது. இந்த வீட்டை மக்கள் "அத்ரான் சாமியார் வீடு" என்று அழைத்து வந்தனர். இந்த வீடு 20-ஆம் நூற்றாண்டின் தொடக்கம் வரை, புதுச்சேரியில் இருந்த "கிருத்து சபைக்கு" (MISSIONS ETRANGERES) சொந்தமாக இருந்தது. அங்கு பாடசாலைகளும், ஓய்வு இல்லங்களும் நடத்தப்பட்டு வந்தன. தற்போது இச்சாமியாரின் வீட்டின் முகப்பின் ஒரு சிறு பகுதியும், பிற்பகுதி முபுவதும் இடிந்து கிடப்பதைக் காணலாம். இவை அடர்ந்த மாந்தோப்பின் நடுவில் காணப்படுகின்றன. மரங்கள் அடர்ந்து காணப்பட்டாலும், முறைப்படி திட்டமிட்டு வடிவமைக்கப்பட்ட தோட்டத்தின் அமைப்பு காணப்படுகிறது. இந்த வீட்டிற்கு மேற்கே 150 மீட்டர் தொலைவில் அரியாங்குப்பம் ஆறு ஓடுகிறது.
1937-ஆம் ஆண்டு "திரு.ழுவோ துய்ப்ரேய்" என்றழைக்கப்படும் பேராசிரியர், புதுச்சேரி பிரெஞ்ச்சுக்கல்லூரியில் பணிபுரிந்து வந்தார். இவர் ஒரு பிரஞ்சுக்காரர். இவர் ஒருமுறை அரிக்கமேடு பகுதிக்கு உலாவச் சென்றார். அங்குச் சிதறிக்கிடந்த சிறு சிறு பொருட்களும் கண்ணாடித் துண்டுகளும்,சில அரியகற்களும். பளபளக்கும் பல்வகைக் கற்களும் அவரது கவனத்தைக் கவர்ந்தன. இக்கற்களை அங்கு விளையாடிக்கொண்டிருந்த சிறுவர்கள் அவரிடம் கொண்டு வந்து கொடுத்தனர். திரு. துய்ப்ரேய் அவர்களுக்கு மிட்டாய், பணம் அல்லது வேறு ஏதாவது பரிசுப் பொருட்கள் கொடுப்பார். இப்பரிசுப் பொருட்களால் கவரப்பட்ட சிறுவர்கள் மேலும் மேலும் பொருட்களை சேமித்து அவரிடம் கொண்டுவந்து கொடுப்பதில் ஆர்வம் காட்டினர்.
அரியாங்குப்பம் ஆற்றை ஒட்டிய பகுதியில் பழங்கால அரிக்கமேட்டுப் பகுதியை அகழாய்வு வழி அடையாளம் கண்டுள்ளனர். மிகப்பரந்து விளங்கிய அரிக்கமேடு கடல் அரிப்பாலும் இயற்கை மாற்றங்களாலும் மிகச்சிறிய தீவுப்பகுதியாக இன்று விளங்குகிறது.
அரிக்கமேடு கி.மு. 200 முதல் கி.பி. 200 வரை புகழ்பெற்ற வணிகத்தளமாக விளங்கியது. வரலாற்றியல், தொல்லியல் அறிஞர்கள் இதனைக் குறிப்பிடுகின்றனர். அயல்நாட்டுப் பயணிகளான பெரிப்புளுஸ், தாலமி முதலானவர்கள் காவிரிப் பூம்பட்டினத்திற்கும் மரக்காணத்திற்கும் இடையே "பொதுகே' என்னும் வணிகத்தலம் (எம்போரியம்) இருந்துள்ளது எனக் குறித்துள்ளனர். பொதுகே என்பது இன்றைய புதுவை சார்ந்த அரிக்கமேடு பகுதியாகும் என மார்ட்டின் வீலர், கசால், விமலா பெக்லி, பீட்டர் பிரான்சிஸ் முதலானவர்கள் கருதுகின்றனர்.
அரிக்கமேட்டுப் பகுதியை இன்று பார்வையிடச் சென்றால் இன்று நமக்குப் பழந்தமிழக அகழாய்வுக் காட்சிகள் எதுவும் காண முடியாத படி மேட்டுப்பகுதியாக மாமரத்தோப்புகளாக மட்டும் காட்சியளிக்கும். ஏனெனில் இங்கு ஆய்வு செய்த அறிஞர்கள் தங்கள் ஆய்வினை நிறைவு செய்த பிறகு அவற்றைப் பாதுக்காப்பாக மூடி விட்டனர். ஆனால் அரியாங்குப்பம் ஆற்றின் கரையோரம் மண்ணரிப்புகளுக்கு இடையே பழைய பானை ஓடுகள், செங்கல், கட்டடச் சுவர் அமைப்புகளின் எச்சம், சிறு சிறு மணிகள் இவற்றை இன்றும் கீழே கிடக்கக் காணலாம்.
தொல்பொருள் ஆய்வுத்துறை ஏறத்தாழ 21 ஏக்கர் நிலத்தைக் கையகப்படுத்திப் பாதுகாக்கப்பட்ட பகுதியாக மாற்றி வைத்துள்ளது. இப்பகுதியில் கி.பி. 17ஆம் நூற்றாண்டு அளவில் கட்டப்பட்டதாக நம்பப்படும் கட்டிடச் சுவர்களின் மேல் பகுதியைக் காணலாம். அழகிய செங்கல் கொண்டு கட்டப்பட்டுள்ளது. இக்கட்டடச் சுவரின் இடையே மிக அகலாமான, நீளமான கற்கள் இடம்பெற்றுள்ளன. இவை பழைய அரிக்கமேட்டுக் கல் என நம்புவோரும் உண்டு.
அரிக்கமேடு பண்டைக்காலத்தில் பெருமைமிக்க ஊராகப் புகழுடன் இருந்தது. கடற்கோளோ, இயற்கைச் சீற்றமோ, சமய மதப் பூசல்களோ, அயல் நாட்டினரின் படையயடுப்போ இவ்வூரின் பெருமையை அறிய முடியாமல் செய்துவிட்டது. ஆங்கிலேயர்களும் பிரெஞ்சுக்காரர்களும் தமிழகத்தின் பகுதிகளைக் கைப்பற்றியபோது பிரெஞ்சுக்காரர்களின் ஆளுகைக்குப் புதுச்சேரி வந்தது.
1940 அளவில் அரிக்கமேட்டுப் பகுதியில் பூமியில் தென்னம்பிள்ளைநட குழிதோண்டிய பொழுது மண்சாடி, மட்பாண்ட ஓடுகள் கிடைத்தன. இதன் விளைவாக 1944இல் மார்ட்டின் வீலர் அரிக்கமேடு பகுதியில் பல்வேறு உண்மைகள் மறைந்து இருக்குமென நினைத்து அகழாய்வில் ஈடுபட்டார். இதில் பல்வேறு உண்மைகள் வெளியுலகிற்கு தெரியவந்தன.
அரிக்கமேட்டுப் பகுதியில் கிடைத்த பொருட்கள்:
அரிக்கமேட்டுப் பகுதியில் அகழாய்வு செய்துப் பார்த்த அறிஞர்கள் அழகிய செங்கல் சுவர், ஈமத்தாழிகள், பலவண்ண மணிகள், பலவகை ஓடுகளைக் கண்டுபிடித்துள்ளனர். இங்குக் கிடைக்கும் பல்வேறு மணிகளை ஒத்துக் கிழக்குக் கடற்கரையின் பழந்தமிழக நகரங்களிலும் மணிகள் கிடைக்கின்றன. கழிமுகப்பகுதிகளில், கிடைத்த ஓடுகளில் தமிழ் பிராமி எழுத்துகள் இடம்பெற்றுள்ளன.
பதினொரு அடி ஆழத்தில் ஒரு மண்டை ஓடும், பூணைக்கண் மணிகளும் கிடைத்துள்ளன. மணி உருக்குச் சட்டங்கள். சாயக்கலவை படிந்த ஓடுகள், கோமேதகக் கல், பச்சைமணிக்கல், படிகமணிகள், அரைத்தான் ஓடுகள், ரோமாணிய காசு, மோதிரம், உறைகிணறுகள் முதலியன குறிப்பிடத்தக்க பொருள்களாகும். இங்குக் காணப்படும் உறைகிணற்றில் சாயம் படிந்து காணப்படுவதால் துணிகளுக்குச் சாயம் ஏற்றும் தொழில் இங்கு நடைபெற்று இருக்கலாம் என்று நம்பப்படுகிறது.
அரிக்கமேட்டுப் பகுதியில் பல்வேறு வடிவங்களில் மணிகள் கிடைப்பதாலும், அவற்றில் வேலைப்பாடுகள் காணப்படுவதாலும் இங்கு மணி உருக்குத் தொழிற்சாலைகள் இருந்தனவோ என்று எண்ண வேண்டியுள்ளது.
பண்டைக்காலத்தில் மணிகளை உருக்கி, காய்ச்சி, துளையிட்டு, தூய்மை செய்து மணிகளை உருவாக்கியுள்ளனர். இங்கு நீலமணி, பச்சைமணி, ஊதாமணி, கருப்பு மணி மிகுதியாகக் கிடைத்தன. தங்கக் காசுகளும் செப்புக் காசுகளும் அரிக்கமேட்டில் கிடைத்துள்ளன. ஏறத்தாழ 200 வகையான மட்பாண்ட ஓடுகள் இங்குச் சேகரிக்கப்பட்டுள்ளன.பானை ஓடுகளில் "அண்டிய மகர்', அந்தக, ஆவி, ஆமி, ஆதித்தியன் எனும் பெயர்கள் எழுதப்பட்டுள்ளன.
கூர்முனை சாடிகளில் பழச்சாறு தயாரித்து மண்ணில் புதைத்து உண்டுள்ளனர். பழங்காலத்தில் அயல்நாட்டினரை (ரோமானியர்) யவனர் என்றழைத்தனர். இவர்கள் மது அருந்தும் இயல்பு உடையவர்கள். இந்த யவனர்கள் மிகுதியாக இப்பகுதியில் தங்கியிருந்தமைக்குக் கூர்முனைச்சாடிகள் சான்றுகளாக உள்ளன.
எலும்பில் அமைந்த எழுத்தாணி, தங்கத்தில் செய்த கலைப்பொருள், மீன் முள்ளாலான கலைப்பொருள்கள் கிடைத்துள்ளன. சுடுமண் பொம்மைகளில் மனித உருவங்கள் கலைநுட்பத்துடன் காட்டப்பட்டுள்ளன. முடி, முலை, முகம் சிறப்புடன் காட்டப்பட்டுள்ளன. கிளிஞ்சல், சங்கு இவற்றால் செய்த பொருள்களும் கிடைத்துள்ளன.
உரோமானிய விளக்கு, மரச்சாமான்கள், வடகயிறு, மரச்சுத்தி முதலான மக்கள் அன்றாடம் பயன்படுத்தும் பொருள்கள் அரிக்கமேட்டு அகழாய்வில் கிடைத்துள்ளன.
ரோமப் பேரரசன் அகஸ்டஸ் தலை பொறித்த காசு அரிக்கமேட்டில் கிடைத்துள்ளது. அவன் வாழ்ந்த காலம் கி,மு. இருபத்து மூன்று முதல் கி.பி. பதிநான்கு வரை. அக்காலத்தில் அரிக்கமேடு சிறந்த வாணிபத்தலமாக விளங்கியது. அரிக்கமேட்டில் கிடைத்த மணிகள், மட்பாண்ட ஓடுகள் ஆகியவற்றைக் கொண்டு அவ்விடம் 2000 ஆண்டுகாலப் பழைமையுடையது எனக் கருதுகின்றனர். அரிக்கமேட்டில் கிரேக்க ரோமானியர்கள் வந்து தங்கி ஏற்றுமதி, இறக்குமதி செய்தனர். துணி நெய்தல், மட்பாண்டம் செய்தல், மணிவகைகள் செய்தல், சங்கு வளையல் செய்தல், உருக்கு மணி செய்தல் ஆகியவற்றில் ஈடுபட்டனர். அங்குப் பெரிய நகரமே புதையுண்டு கிடக்கிறது. இவற்றிற்கு அடையாளமாகப் பல சாயத்தொட்டிகள், உறைக் கிணறுகள் அங்கு கிடைத்து வருகின்றன. அரிக்கமேட்டில் உருக்குமணி (Beads) செய்தல் நடைபெற்றுள்ளது. உருகுந் தன்மையுடைய மணற் பொருட்களைச் சூளையிலிட்டு உருகச்செய்து வண்ணமேற்றி நீண்ட இழைகளாகச் செய்து, அதனுள்ளே காற்றைச் செலுத்தி ஊது குழலாக்கிச் சூடு குறைந்த பின்னர் சிறு சிறு துண்டுகளாக வெட்டி மணிகள் செய்து மெருகூட்டி மணிமாலையாகக் கோர்த்துள்ளனர். கருப்பு, நீலம், ஊதா, மஞ்சள், சிவப்பு, பச்சை முதலிய நிறங்களில் மணிகள் செய்யப்பட்டுள்ளன. அங்கு அகழ்வாராய்ச்சி செய்தபோது மணி செய்த சிட்டங்களும், கச்சாப் பொருட்களும் உருக்குக் கிண்ணங்களும் கிடைத்துள்ளன.
ஒளியூடுருவக் கூடிய கண்ணாடிக் கற்களைக் கொண்டு மணிகள் (Semi precious stones), செய்தனர். நீலக்கல், பச்சைக்கல், சிவப்புக்கல், கோமேதகம் முதலிய கற்களைச் சிறு சிறு துண்டுகளாக வெட்டிப் பட்டை தீட்டித் துளையிட்டு, மெருகேற்றி மணியாக்கினர். கடினமான கற்களில் மெல்லிய துளையிட்டுள்ளதைக் காணும்போது அவர்களின் கைவினைத்திறம் தெளிவாகப் புரிகிறது. இதனைக் கண்ணாடி மணிகளென்பர் (Glass Beads). கடலில் கிடைக்குஞ் சங்குகளைக் கொண்டுவந்து அறுந்து பட்டை தீட்டி, மெருகேற்றி மணியாகவும், வளையலாகவும், மோதிரமாகவும் செய்துள்ளனர். அரிக்கமேட்டில் பொன்னால் செய்யப்பட்ட கழுத்தணிகள், காதணிகள், மூக்கணிகள் ஆகியவை கிடைத்துள்ளன. அரியாங்குப்பத்து ஆறு, வெள்ளப் பெருக்கெடுத்தோடி மண்ணை அரித்து விடுகிறது. அப்படி அரிக்கப்பட்ட பகுதியே அரிக்கமேடு என்பர் சிலர். அங்கே அருகன் (புத்தன்) சிலையுள்ளது. ஆதலால் அருகன்மேடு - அருக்கன்மேடு - அரிக்கன் மேடு - அரிக்கமேடு என வழங்கப்பட்டதென்பர் சிலர். இங்குள்ள புத்தர் சிலை பர்மாவிலிருந்து கொண்டுவரப் பட்டதென்றும் அதனால் அது பர்மாக் கோயிலென வழங்கப் பட்டதென்றும், பின்னாளில் பிருமன் கோயில் - பிர்மன் கோயில் என்று மருவியது எனவும் கூறுகின்றனர். இப்பகுதியில் பௌத்தம் பரவியதென்பதற்கு இச்சிலையே சான்றாக உள்ளது.
அயல்நாட்டார் குறிப்பிடும் புதுச்சேரி:
புதுச்சேரியை பண்டைய அயல்நாடு வரலாற்று ஆசிரியர்கள் பெரிப்ளூஸ் என்னும் நூலில் (The Periplus of the Erytheraean Sea) பொதுகெ (Podouke) என்றும், தாலமி (Ptolemy) எழுதிய நூலில் பொதுகா (Podouka) என்றும் குறிப்பிட்டுள்ளனர். இதே போல், தமிழகக் கடற்கரையை டிரிமிக்கா எனவும், காவிரிப்பூம் பட்டினத்தைக் காமரா எனவும், மரக்காணத்தை சொபட்னா (சோபட்மா) எனவும் அவர்கள் அழைத்தனர். அதற்கேற்றாற்போல் அரிக்கமேட்டில் மேற்கொள்ளப்பட்ட அகழ்வாய்வுகள், அங்கு கி.மு. முதல் நூற்றாண்டுக்கு முற்பட்டவொரு வணிகத் துறைமுக நகரம் இருந்ததைக் காட்டுகின்றன.
சங்க இலக்கியமும் புதுச்சேரியும் :
புதுச்சேரியில் வாழ்ந்ததாகக் கூறப்படும் வீரை வெளியனாரும், வீரை வெளியந்தித்தனாரும் பாடிய பாடல்கள் இலக்கிய சான்றுகளாகத் திகழ்கின்றன. தமிழ் இலக்கியங்களில் காலத்தாற் பழைமையானவை சங்க இலக்கியங்கள். அவை கி.மு. 500 ஆண்டுகளை மேல்எல்லையான உடையன. அவற்றில் வீரை வெளியனார், வீரை வெளியந்தித்தனார் என்னும் புலவர்களின் பாடல்கள் இடம் பெற்றுள்ளன. வீரைவெளி என்னும் ஊர், புதுச்சேரிப் பகுதியிலுள்ள ஒரு சிற்றூராகும். வீரர்வெளி என்பதே வீரைவெளியென மருவியது என்பர். அப்பகுதியில் வாழ்ந்தவர்களாக இவ்விரு புலவர்களையும் கருத இடமுண்டு. வீரைவெளியனார் பாடல் அகநானூற்றில் முன்னூற்று இருபதாம் பாடலாகவும், வீரைவெளியன் தித்தனாரின் பாடல் அந்நூலில் நூற்று எண்பத்தெட்டாம் பாடலாகவும் காணப்படுகின்றன. இவ்விருவரும் ஒருவரே எனக்கருதுவாரும் உண்டு.
அரியாங்குப்பம் ஆற்றால் அரணிட்டுக் காக்கப்படும் அரிக்கமேட்டுப் பகுதியில் நவீன தொழில் நுட்பங்களைப் பயன்படுத்தித் தொடர் ஆய்வு செய்வதால் பழந்தமிழகத்தின் பெருமையையும் அயல்நாட்டுடன் கொண்டிருந்த கப்பல் வழி வணிகத்தையும் நிலைநாட்ட முடியும்.
கிட்டத்தட்ட மூன்று கிலோ மீட்டர் அளவிற்கு பூமிக்கு நெடுக புதைந்துள்ள ஒரு மாபெரும் நகரம் . அருகிலுள்ள ஆற்றிலும் மறைந்துள்ளது
...
ROMAN CONTACTS WITH TAMILNADU (SOUTH EASTERN INDIA)- RECENT FINDINGS
K.V.RAMAN, (Professor of Ancient History and Archaeology, University of Madras)
Remains Of A Trading Port Dating Back To 2nd Century
Arikamedu, the ancient Roman trade centre is 4-km south of Pondicherry on the Right Bank of Ariyankuppam River. Arikamedu is of special importance in South Indian archaeology and it is best known for its stone bead production. It has a long history that dates back to the 2nd century BC. Excavations in the Arikamedu area have brought to light the remains of a trading port, which had connections with the Greco-Roman world more than a century before the down of the Christian Era.
An Exquisite Blend Roman, Freanch & Indian Influence
Romans, Cholas and French who left their mark on this wonderful place inhabited the port town. Discovered in the 1930s, quickly linked with Roman trade, it was excavated three times in the 1940s. The first excavation was an amateur French endeavour; R.E.M. Wheeler conducted the second and best-known campaign and J.M. Casal conducted the third.
Arikamedu, a fishing colony was used as a port for trade with the Romans and Greco-Romans. An ancient Chola coin dating back to 1st BC suggests involvement of Cholas in various port related activities. Few names on seals that were found here have been mentioned in the Sangam literature as well.
Excavations Conducted By Jouveau-Dubreail
Jouveau-Dubreail identified Arikamedu as Poduke in the Periplus Maris Erythraei. The excavations by Jouvean Dubreuil in 1937 at Arikkamedu revealed hitherto unknown facts about the grandeur of the Dravidian Civilisation. It is a matter of regret that his discoveries are now in the French School of Museum at Hanoi. Later the site was divided into two sectors northern and southern, as they were perceived to have been inhabited by different ethnic groups. It is also known as "Yavanas" in Tamil literature.
Excavations Conducted By M.Wheeler
The British Director General of Archaeology M. Wheeler excavated many things at Arikamedu which are lodged at the Archaeological Survey of India. But now only fragments of the bulk of archaeological discoveries are at the Roman Rolland Museum, Pondicherry. Wheeler discovered the remnants of a factory owned by Romans belonging to the reign of Augustus.
Textile exports especially muslin cloth from Arikamedu area stands archaeologically proven by the discovery of series of tanks or dyeing vats. Graeco-Roman gem cutters habituated here had left gems carved with intaglio design as proof. Chinese ports of the 10th and 11th centuries had trade links. Even today if one looks carefully, after about of heavy rains, one can find beads on the bank of the river. The Romans must have used the Red Sea to come to India as traces of beads have been found in Alexandria and other Red Sea ports.
Arikamedu In Medieval Times
Formerly it was considered that Arikamedu was abandoned after 200 AD but during excavations few fragments of Amphoras and a copper coin of Constantine I minted between 306-324 AD found suggest that Arikamedu was occupied from 300 AD to 700 AD. There is also considerable evidence to suggest that the site was occupied during medieval Chola times. Finds of Chola coins, Chinese Celadon pottery and other East Asian glazed ceramics suggest occupation of the site and some involvement in the Medieval East-West maritime trade as well.
During excavations they came across pottery, which is very similar to the 11th century pottery of "Gangaikondacholapuram". Decorated spouts of water jars and clay lamps of the medieval period are also present. Two perpendicular walls were accidentally laid open and it was suggested that the bricks of this wall and that found in Gangaikondacholapuram are similar, though one cannot be sure. Therefore it is not possible to place the walls in any specific time period yet.
Arikamedu In Modern Times
The remaining walls of the seminary built between 1771-73 Monsieur Pigneau de, designated Bishop of Adran Behaine clearly indicate the use of mixed style of bricks, some of them, probably pilfered from ancient structures. The mission house has been the point of reference for all excavators viz. Wheeler, Casal and Vimala Begely and co. There doesn't seem to be evidence of any other structure belonging to this French period.
But now one can see a few fragments of decorative ceramic tiles and reliefs, pieces of pottery and glass in the Pondicherry Museum. Except for the perpendicular walls and mission house there is not much that can be seen on the surface as the excavated trenches have been filled up.
French astronomer named Guillume Le Gentil visited Pondicherry on the Coromandel coast of India, noticed some huge bricks, ruined walls and remains of old wells at a place called Arikamedu...
Some time between 1768-71, a French astronomer named Guillume Le Gentil visited Pondicherry on the south-eastern coast (known as the Coromandel coast) of India. He noticed some huge bricks, ruined walls and remains of old wells at a place called Arikamedu, just 4 km away from Pondicherry. Arikamedu was located on the right bank of the river Ariyankuppam, just as the river enters the Bay of Bengal. Le Gentil was convinced that these were the ruins of a large, ancient village or even a town. He was right, but it was a very long time before archaeologists realized the importance of this site.
Arikamedu was first excavated in the 1940's. in the northern part of the site archaeologists found the remains of what seemed to be a brick warehouse where trade goods were stored. In the southern part, they found two courtyards, along with tanks and drains. They thought that this might have been a place where fine muslin cloth was dyed and prepared for export. Though most of the pottery that was found was Indian, there were certain kinds of foreign pottery that clearly came from the Mediterranean countries f Europe. One was a red pottery with a decorated surface, known as terra sigillata. The other is called amphora. These are jars with a pink body and a yellow slip or coating, and two handles. Archaeologists also found lots of beads made of gold, glass, and semi-precious stones (some with Greek or Roman designs), Roman Lamps, and Roman glass items at the site.
What did the foreign jars that came to Arikamedu have inside them? Who were these things meant for?
These sorts of jars were used to hold wine, sauce or olive oil. These things might have been shipped to Arikamedu for foreign traders who lived here and missed the kind of things they were used to at home. But things like wine could just as well have been bought by well-to-do Indians.
Ancient Tamil poems talk in several places about people they call "yavanas." They talk of yavana merchants bringing in merchandise like fine lamps, gold, and wine and buying cargoes of pepper at the ports of South India. At this time, the word yavana was a general word used for foreigners such as Greeks, Romans, and West Asians. There are also some old books in Greek and Latin that tell us about trade between the Roman empire and India between about 200 B.C. and 200 A.D.. They give us the names of ports and lists of goods. Hundreds of Roman gold coins, most of them belonging to the reigns of the Roman emperors Augustus and Tiberius, have been found at many places in India, mostly in the south. All these clues tell us that during this period, there was brisk trade going on between the Roman Empire and India.
It all tied in neatly. The Tamil poems, the Latin books and the archaeological evidence seemed to be talking about the same sort of thing. Archaeologists were convinced that Arikamedu must have been of one of the places where the yavanas of the Tamil poems lived and traded. This must also have been one of many trading centres where the Romans and Indians carried out business with each other between the 1st century B.C. and the 2nd century A.D.. Some archaeologists identified Arikamedu with a place called Poduke, mentioned in old Latin books
What were the items of trade between the Roman empire and India? The imports from the Mediterranean lands that came to ports like Arikamedu included wine, bowls and lamps made of clay, glass beads and bowls, and maybe gems. Indian goods such as pepper were in demand in the west. Going by the evidence from Arikamedu, other things exported from this port probably included beads of semi-precious stones and glass, and maybe shell bangles. There was also a brisk transit trade going on in items such as silk from China and species from south-east Asia. These first came to the Indian ports and then were shipped to the west. Traders seem to have been familiar with the sea route from the Indian ports to the Mediterranean Sea via the Red Sea.
Arikamedu was excavated again recently between 1989 and 1992. These excavations led to new discoveries and made it necessary to change some of the earlier conclusions. The earlier archaeologists had thought that the settlement at Arikamedu had come up when the trade with the Roman empire started in the first century B.C.. The new excavations suggested that a fairly well-established settlement already existed here for some time before this trade started. But once the trade started, the settlement grew bigger and more prosperous.
The earlier archaeologists had thought that the northern part of Arikamedu was the port area and the southern part the industrial part, i.e. the area where the bead-making and textile work went on. The recent excavations suggest that the activities at the site were not so neatly divided. Also, some people, probably merchants and sailors, actually lived in both these areas. More foreign pottery was found in the northernmost part of Arikamedu, so this may have been where some foreigners lived. The tank-like structures found in the southern area were earlier understood as places where muslin cloth was dyed. Now it was suggested that they had nothing to do with dying cloth and may have been enclosures for storing food or some other kinds of goods.
Archaeologists are no longer sure about whether traders from the Roman empire actually lived at Arikamedu in large numbers or not. Do the foreign items found at Arikamedu point to foreigners living here, or do they simply point to items imported from foreign lands for local inhabitants? It is however clear that apart from Roman and Indians, there were many other people such as Arabs and Greeks from Egypt who were involved in the Indo-Roman trade.
Archaeologists used to think that the Indian trade with the Roman empire came to an end in the 2nd century A.D. and that the settlement of Arikamedu was abandoned when this happened. But the recent excavations show that there was some trade between India and the Mediterranean lands between the 3rd and 7th centuries A.D., although it was much less than before.
Coins of the Chola kings, and clay lamps made in the medieval period, and remains of even later periods show that people lived at Arikamedu, off and on, till modern times. Pieces of Chinese and East Asian pottery that were found at the site suggest that Arikamedu continued to be an important trading centre, and that after the ninth century, the people were trading with other lands. Apart from the foreign trade, Arikamedu must also have been involved in the trade that was carried on up and down the Indian coasts as well.
As you can see, when a site is excavated again, the new evidence can give us a different picture of its history. There are still many unanswered questions about Arikamedu. For example, while we now know quite a bit about the importance of this site in the trade between India and the Roman empire, we need to find more about the connections between Arikamedu and other ports and towns of South India. Maybe further excavations at Arikamedu will soon give us answers to these and other questions.
https://thamizhkanal.com/

தொல்லியல் சுவடுகள்